மாணவர்களுக்கான சிந்தனையைத் தூண்டும் கதைகளை கூறலாமே..
மாணவர்களுக்கான சிந்தனையைத் தூண்டும் கதைகளை கூறலாமே..
கதைகள் படித்தவர்கள் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் சொல்லி மகிழுங்கள்.
ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை.
அதைத்தான் இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய்.
ஏன் இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்?''
என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி பயத்துடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது.
நான் எப்படி நீரைக் கலக்க முடியும்?
தாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும்!'' என்று மெல்லிய குரலில் கேட்டது.
பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா?
நீ கலக்காவிடில் உங்கப்பன் கலக்கியிருப்பான்! உங்கப்பன் கலக்கா விட்டால், உன் பாட்டன் கலக்கியிருப்பான். உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது!'' என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது.
துஷ்டர்களிடம் நியாயம் எடுபடாது. மவுனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம்.
No comments: